Wednesday 9 August 2017

ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் சாவு

திரிசூலத்தில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் சாவு ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து பலி


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது20). இவர் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3–ம் ஆண்டு படித்து வந்தார். வந்தவாசியில் இருந்து தினமும் வரமுடியாத காரணத்தால் சிங்கபெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார்.மாணவர் சந்தோஷ் நேற்று கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது வந்த மின்சார ரெயிலில் அவர் ஏறினார். அந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் மாணவர் சந்தோஷ் ரெயிலில் இருந்து இறங்கி கீழே நின்றார்.பயணிகள் ஏறியதும் சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டது. அப்போது ரெயிலின் வாசலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில் புறப்பட்டதும் கீழே இறங்கி நின்ற மாணவர் சந்தோஷ் ஓடிச்சென்று ரெயிலில் ஏற முயன்றார்.அப்போது கால் தடுமாறி மாணவர் சந்தோஷ் ரெயில் நிலைய நடைமேடைக்கும் ரெயிலுக்கும் நடுவே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுபற்றி தகவல் கிடைத்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment