Wednesday 9 August 2017

அகஸ்தியர் அருவி தூய்மை - கலெக்டருக்கு உத்தரவு


பாபநாசம் அகஸ்தியர் அருவி தூய்மை படுத்த கோரிய மனு குறித்து பதில் அளிக்க நெல்லைமாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கணேஷ் பெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கின் மீது மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அகஸ்தியர் அருவியில் குப்பை கழிவுகள் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பதில் அளிக்க தமிழக சுற்றுலாத்துறை செயலர் ,மற்றும் நெல்லைமாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment