Tuesday 8 August 2017

கன்னியாகுமரி கடலில் அணிவகுத்த டால்பின்கள்



முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், அரிய வகை மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உள்ள நாட்களில் டால்பின்கள் கரைப்பகுதிக்கு வந்து செல்லும் என்று, மீனவளத்துறையினர் தெரிவித்து வந்தனர். ஆனால் டால்பின்களை யாரும் பார்த்ததில்லை.இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு 50-க்கும் மேற்பட்ட டால்பின்கள், விவேகானந்தர் பாறை அருகில் இருந்து சின்னமுட்டம் துறைமுக பகுதிவரை அணிவகுத்து சென்றன. அவை கூட்டமாக செல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன. இதைக்கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவேகானந்தர் பாறைக்கு படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள், டால்பின்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பகல் 11 மணி வரை டால்பின்கள் நீந்திச் சென்றன.


No comments:

Post a Comment