Tuesday 8 August 2017

சுதந்திரதினம்: நடைபாதைகளை அழகுபடுத்த நடவடிக்கை

Image result for independence day celebration images


சுதந்திர தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலை மற்றும் என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதைகளை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சுதந்திர தின விழாவுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகள் புனித ஜார்ஜ் கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின விழா அணிவகுப்பை காண, மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வருவது வழக்கம்.இந்நிலையில், பொதுமக்களை கவரும் வகையில், புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள சாலைகளை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுதந்திர தினத்தை முன்னிட்டு, காமராஜர் சாலை, கோட்டை சாலை, என்எஸ்சி போஸ் சாலை ஆகிய சாலைகளின் இரு புறமும் உள்ள நடைபாதைகளுக்கு வண்ணம் பூசுதல், சிறு குறைபாடுகளை சரி செய்தல் மற்றும் தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.15 லட்சத்து 64 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.


No comments:

Post a Comment